திருவண்ணாமலையில் பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

" alt="" aria-hidden="true" />


திருவண்ணாமலையில்  பில்இல்லாமல் முக கவசம் மருந்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில்    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் மற்றும் சானிடரி பொருட்கள் உரிய பில் இல்லாமல் விற்பனை செய்தாலோ அல்லது இது போன்ற பொருட்களை தட்டுப்பாடு காரணம் காட்டி அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி எச்சரித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் அன்பு மெடிக்கலில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். அப்போதும் அவகாசம் மற்றும்  சானிடரி பொருட்கள் பில் இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.


Popular posts
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
மானியதள்ளி கிராம நியாய விலை கடையில் மஞ்சள் மற்றும் வேம்பு கலந்த நீரில் கைகளை கழுவிய பின்னரே பொருட்கள் ‌வாங்க பொதுமக்கள் அனுமதி. நியாயவிலை கடைக்காரரின் அதிரடி நடவடிக்கை .
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
திருவண்ணாமலை நகரம் பாரதிய ஜனதா கட்சியினர் சிவனடியாருக்கு தினந்தோறும் காலை உணவு வழங்குகின்றனர்
Image
நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கினார் நாமக்கல் MP. AKP.சின்ராஜ் அவர்கள்
Image